நாளைய தீர்ப்பு- நாடே எதிர்பார்க்கின்ற தீர்ப்பு. காசு பணத்திற்கு, வயல் வாய்க்காலுக்கு, குற்ற குறைபாடுகளுக்கு நடுவர் தீர்ப்பை காணலாம். மனித உணர்வுகளுக்குமா தீர்ப்பு? மனித நேயத்தோடு அணுகவேண்டியதை சட்டத்தின் மூலமாக ஓர் தீர்வா? அரசியலும் ஆன்மீகமும் தள்ளி நின்றாலே சர்ச்சைக்குள்ள இடத்தை சார்ந்த சமானிய மக்களே இன்றும் சகோதர பாசத்தோடு இருக்கின்ற மனிதநேய உறவுகளே நல்ல தீர்ப்பை காண்பார்களே! எல்லா நதியும் சென்று சேர்வது சமுத்திரமே. நதி ஓடுகின்ற பாதையின் மண்ணின் தன்மையைப் பொறுத்து அதன் சுவை வேறுபடலாம். கடலில் கலந்தபின் அனைத்தும் ஒரு சுவைதானே. மார்க்கம் பலவாயினும் சென்று சேருமிடம் ஒன்று தானே.
எனது இந்திய உலக உறவுகளே தீர்ப்பு எதுவாகினும் அனைவரும் ஒருதாய் மக்கள் பாரததாயின் பிள்ளைகளே என அமைதி காத்து அரசியல் ஆன்மீகவாதிகளை புறம் தள்ளி ஒற்றுமை காண்போம்.